Friday, November 24, 2017

அண்டை வீட்டு நல்லவன்! - சிறுகதை

அண்டை வீட்டு நல்லவன்! - சிறுகதை

எழில்வரதன் - ஓவியம்: ரமணன்
 
சையாம பல மணி நேரமா காம்பவுண்டு சுவத்துக்கு முட்டுக்கொடுத்து உக்காந்திருக்காரே... அவர் பேரு111.jpg பார்த்தசாரதி. இப்ப யார்கிட்டயும் பேச மாட்டார். அவருக்கு பொண்டாட்டியோட சண்டை. ரெண்டு நாளா வயிறும் சரியில்லை; வாழ்க்கையும் சரியில்லை. அதனால, ஒருத்தர்கிட்டயும் பேசக் கூடாதுங்கற வைராக்கியம் அவருக்கு.

அவரைப் பார்க்க ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஃப்ரெண்டு வந்தாங்க. பேரு அமுதவள்ளி. பார்த்தசாரதியோட அந்தக் காலத்து டாவு. அவங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தைங்க. பார்த்தசாரதிகிட்ட, `கல்யாண வாழ்க்கை எப்படிடா போயிட்டிருக்கு?’னு கேட்டாங்க. பார்த்தசாரதிக்குக் கல்யாணம் முடிஞ்சி, ஆறு மாசம்தான் ஆச்சு. தாம்பத்ய வாழ்க்கையில பயங்கரத் தகராறு; டப்பா டான்ஸ் ஆடுது. ஆனா, சோத்துக்கு உப்புப் போட்டுத் திங்கறவன், பொண்டாட்டி சரியில்லைனு அடுத்தவன் பொண்டாட்டிகிட்ட புகார் பண்ண மாட்டான். பண்ணினா அது அசிங்கம். அதுவுமில்லாம, பேசக் கூடாதுங்கற வைராக்கியம். ஆனா, காலங்காத்தால இயற்கை உபாதை முட்டிட்டு நிக்குமே... அப்படி துக்கம் தொண்டைக்குழியில பீறிட்டு நிக்குது. அழாம இருக்க முடியாது. பார்த்தசாரதி வெடிச்சிட்டாரு. `ஓ...’னு ஒரே அழுகை.
p326a.jpg
“டேய், என்னாச்சுடா? வீட்ல ஏதாவது பிரச்னையா?” ஃப்ரெண்டு கேட்டாங்க.

“எனக்கு வீடே பிரச்னைதாண்டி. மூக்குல மொளகாப்பொடி தூவிக்கிட்டு, `ஹச்சு... ஹச்சு’னு தும்மிக்கிட்டே, ஒன்பதாயிரம் ஓட்டை இருக்கிற முண்டா பனியனைப் போட்டுக்க நீ ட்ரை பண்ணியிருக்கியா?”
``டேய்... லூசு... உன்னோட முண்டா பனியனை நான் எதுக்குடா போட்டுக்கணும்?”


Sunday, August 6, 2017

புத்தகம் - புதுவரவு

புதிய வரவு


“செம்புலி வேட்டை” – “அழகிய லம்பன்” என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் புதுவரவாய் வந்திருக்கிறது. நண்பர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். இரண்டு தொகுப்புக்களை ஒருசேர பார்த்ததும் பழைய நினைவுகள் பின்னுக்கு இழுக்கிறது. வேலைபார்ப்பது கணரகவாகன உற்பத்தி நிறுவனத்தில். இன்றைக்கும் இரும்படிக்கும் வேலைதான். இதன் நடுவே எழுதவும் வாய்த்திருக்கிறது. பொதிசுமக்கும் கழுதை, உணவு இடைவேளையில், வயலின் வாசிப்பது போல இதுவும் ஒரு இடுக்கனில் இன்புறும் நிகழ்வு. தூண்டல் இல்லாமல் துலக்கம் இல்லை. யார் என்னை தூண்டினார்கள் எது என்னை எழுதவைத்தது?
.
நிச்சயமாக அவை புத்தகங்கள்தான். ஆனால் எழுதியவை எல்லாம் இலக்கியமல்ல. சபையில் ஆடாமல் கூத்தனுக்கு என்ன பெருமை? அதற்கு ஒரு களம் வேண்டாமா? அந்த களம் அமைத்துக் கொடுத்தவர்கள் யார்?. யோசித்துப் பார்க்கிறேன்.