Showing posts with label எழில்வரதன். Show all posts
Showing posts with label எழில்வரதன். Show all posts

Tuesday, June 8, 2021

தலைகீழ் மனிதர்கள். - அக்கப்போர்


தலைகீழ் மனிதர்கள்.
--------------------------------
ஆயிரம் பேரிடம் விசாரித்தால்
அதில் ஒருவர்தான்
இலக்கியப் புத்தகத்தை கட்டிக் கொண்டு அழுவதாக சொல்வார். அந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வாழ்க்கையை கட்டிக்கொண்டு மாறடிக்கிறார்கள்.

எல்லோருக்கும் வயிறு இருக்கிறது.
வயிற்றை கவிதை கொண்டு நிரப்ப முடியாது.
காசு கொண்டுதான் நிரப்ப முடியும்.
பணம் என்கிற வேதாளம் எல்லா மனிதர்களையும் தலைகீழாக மாற்றி வௌவாலாக தொங்கவிட்டிருக்கிறது.

நானும் ஒரு வௌவாலாக மாறிய பிறகு
என்னை நான் மாற்றிக்கொண்டேன்.
அப்போதிலிருந்து நான்
தலைகீழாக எழுதத் துவங்கினேன்.
சில மனிதர்களும்
நிறைய வௌவால்களும்
அந்த எழுத்தை
படித்து புரிந்து கொண்டு
ரசிக்கின்றன.
---------------------
08.06.2021

Monday, June 7, 2021

தலையெழுத்து - கவிதை

தலையெழுத்து

------------------------

முதல் பக்கத்தை

காணவில்லை

இரண்டாம் பக்கத்தை கிழித்துவிட்டேன்.

மூன்றாம் பக்கத்தில்

ஏகப்பட்ட எழுத்துப் பிழை

நான்காம் பக்கத்தில்

வைக் காணோம்.

ஐந்தாம் பக்கத்தில்

பாய் இருக்கும் இடத்தில்

பேய் இருக்கிறது

ஆறாம் பக்கத்தில்

Sunday, June 6, 2021

பெண் உலகம் - கவிதை


பெண் உலகம்

---------------------------

சாகும்வரை

உண்பதை நிறுத்தப் போவதில்லை

உயிரோடு இருக்கும் வரை

போராட்டம் நிற்கப் போவதில்லை.

 

எனக்கு எதிரிகள் உண்டு

அவர்களோடு உரசலும் உண்டு

எனக்கு நண்பர்கள் உண்டு

அவர்களோடு மோதலும் உண்டு.

 

தூங்கும் போதும் கனவில்

பேசிக்கொண்டிருப்பேன்

காதலிக்கும் ஆண்களோடு

ரகசியமாய் உரையாடுவேன் .

கோமகனின் தாய். - கவிதை


கோமகனின் தாய்.

-------------------------------

முன்பொரு காலத்தில்

கணபதிக்கு சாப்பிடத் தெரியாது

அவன் சிறு வயது பிள்ளை என்பதால்

அம்மா அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

 

பின்பொரு காலத்தில்

கணபதிக்கும்

சித்ராவுக்கும்

திருமணம் ஆனது.

 

சில ஆண்டு கழித்து

கணபதிக்கு உஷை பிறந்தாள்.

கடைசி கேள்வி - கவிதை


கடைசி கேள்வி

------------------------------

மூச்சு முட்டுகிறது

உயிர் தப்பிக்கப் போராடுகிறேன்.

ஆயிரம் பிறை கண்ட

கழுதைகளுக்குத் தெரியாத

அர்த்தம் எனக்கு மட்டும்

புரியப் போவதில்லை.

இடுக்கில் மாட்டிக்கொண்ட

வாழ்க்கையை

நெம்புகோள் கொண்டு

வெளியே எடுக்க முயல்கிறேன்.

பார்க்க கேவலமாய்

இருக்கிறது.

 

Wednesday, June 3, 2020

வணக்கம் நண்பர்களே...


3-Jun-20
வணக்கம் நண்பர்களே...
என்னைப் பற்றி என்னை நானே வியந்து சொல்ல ஒரு தகவல் சொல்கிறேன்... 

நான் சற்று ஏறக்குறைய 2010 ஜனவரியில் இருந்து பிரபல பதிவர்... பிளாக்கின் வழியாக... இரண்டாயிரத்து பத்து முதல் இப்போது 2020 வரையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக பதிவில் பகடையாடுகிறேன்.. இதுவரை நான் எழுதிய பதிவுகள் மொத்தம் நாற்பத்தி எட்டு அதில் சொத்தை சொல்லைகள் போக மிச்சம் இருப்பது எத்தனையாயிரம் கோடிகள் என்று தெரியவில்லை. மொத்தமாக ஆறு ஆயிரத்து நானூத்து இருபது பதிவுகளை யாரோ படித்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் ஆரம்பித்து அண்டார்டிக்கா வரையில் பல பேர் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். அதிகமில்லை மொத்தம் 48 பதிவுகள் சில நூறு பேர் கண்டு இத்தனை பெரிய சாதனை நடந்திருக்கிறது. யோசிக்கவே ஆச்சரியமாக நம்பமுடியாத அளவுக்கு இருக்கிறது. இத்தனை பெரிய சாதனையை மீண்டும் என்னால் முறியடிக்க முடியுமா என்று கூட தெரியவில்லை. இன்றைக்கு 3.6.2020 வரைக்குமான என் கணக்கு வழக்கை உங்களிடம் சொன்னால் அதன் பயங்கரம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இத்தனை பலகாலத்திற்கு பிறகு என்னுடைய பாலோயர் என்றால் மொத்தம் 4 பேர். அதில் நானே இரண்டு ஆளாக இருக்கவும் வாய்ப்புண்டு. அது எப்படி பட்ட பெரிய பட்டியல் என்பதை சொன்னால் அதன் வீரியம் புரியும். அதிகம் இல்லை நண்பர்களே... இன்றைய என்னில் நான் கண்ட பேஜ் கணக்கை நீங்களே படித்துப் பாருங்கள்... அச்சமில்லாமல்... இதுதான் இன்றைய கணக்கு...

ஆனால் நண்பர்களே... எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எழுதும் மனிதனிருக்கு மட்டும் எழுதும் ஆர்வமிருக்கும். வரைக்கும் புதிய அத்தியாயத்தோடு. தொடங்குவோம் நண்பர்களே...
(இப்படி ஒரு அதிர்ச்சி தொடக்கத்திற்கான ஆரம்பத்திற்கு ஒரு காரணமிருக்கிறது. அதையும் நேரம் வரும்போது சொல்வேன்) தொடர்ந்து எழுதுவோம் நண்பர்களே...
மறந்து போன அந்த நான்கு பாலோயர்ஸ் தங்களை மறந்து போகாமல் இருப்பதற்காக சிறு குறிப்பு... என் பெயர் வரதராஜன். புனைவில் எழில்வரதன் என்றும் சொல்வார்கள். அவர்களையும் இனி என் மீது நம்பிக்கை கொண்ட நாலான நாலுகோடியே நான்கு கோடி ஆட்களுக்கும் தொடர்ந்து ஆர்வம் கொண்டு எழுத முயற்சிக்கிறேன். தொடர்ந்து பயணிப்போம். வணக்கம் நண்பர்களே...

எழுத்து வடிவம் நான்.
எழுதியது எனது மனைவி விஜயலட்சுமி.


Saturday, November 30, 2019

வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 4


                மின்சாரம் வந்த நாள் பற்றியோகிணறு வெட்டித் தந்த ஈஸ்வரன் பற்றியோ முற்றும் முழுசுமாக தெரியாதது போலவே நெலிகத்தின் முதல் தையல்காரன் யார் என்ற விசயமும் நெலிகத்தாருக்கு தெரியவில்லை. மரப்பட்டைகளை உடுத்திய பின்நெய்யப்பட்ட உடைகளை உடுத்த ஆரம்பித்த வித்தை அங்கு யார் கொண்டு வந்தார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால்உத்தாண்டி என்ற தையல்காரனைப் பற்றியும் உத்தாண்டியின் அம்மாவைப் பற்றியும் நெலிகத்தில் சிலபேருக்கு கொஞ்சமாக விசயம் தெரிந்திருந்தது.

வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 3





                சுடுகாட்டுக்கு நடுராத்திரியில் போய் அர்த்த சாம பூசைகள் செய்து பேய், பிசாசுகுரளிரத்தக்காட்டேறிபோன்றவற்றை தன் கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி பிறகு பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை போன்றவற்றை தீத்துவிடுவதால் சூராதி சூரன் என்று பெயர் எடுத்த தாத்தாவுக்கு பேரனாகப் பிறந்தவன் சாம்பமூர்த்தி. அவன் இப்பொழுது அப்படி எதுவும் வினோத பூசைகளை தொப்பூர் சுடுகாட்டுக்குப் போய் செய்வதில்லை. காரணம் சுடுகாட்டு பயம் ஊர் மக்களுக்கு சுத்தமாக இல்லாமல் போய்இப்பொழுது சுடுகாட்டுக்கு நடுவிலேயே நான்கைந்து வீடுகள் கட்டி குடும்பமாக குடியிருக்க ஆரம்பித்து விட்டார்கள். நள்ளிரவில் பிணங்கள் எரிவதை சிறுநீர் கழிக்க வரும் சிறுபையன்களும் தகிறியமாகப் பார்த்துவிட்டு கெட்ட கனவுகள் இல்லாமல் சுடுகாட்டுக்கு நடுவீட்டில் தூங்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். சுடுகாட்டில் கொல்லிவாய்ப் பேய், குட்டை முனி போன்றவை இருக்காது என்று ஊர் ஜனங்களுக்கு அத்துப்படியாக தெரிந்துவிட்டது. அதுவும் இல்லாமல் இப்பொழுது செல்போனும், கம்ப்யூட்டரும் வைத்திருக்கும் ஒரு நவீன யந்திர மந்திர தந்திர நிபுணனாக இருக்கும் பிரபலஸ்தன் போயும் போயும் சுடுகாட்டு தலைச்சான் பிள்ளையின் கபாலத்து மை எடுத்து வெற்றிலையில் தடவி வித்தைக்காட்டி காசு சம்பாதிப்பதை அவமானம் என்றும் நினைத்தான்.