கண்ணுக்கு மை தீட்டும் கதைகள்
நவீனகாலத்தில் பொழுதுபோக்க எத்தனையோ
வந்துவிட்டது.. கையடக்கப் போன்களில் பார்க்கவும், கேட்கவும்,
ஓயாமல் பேசவும், எழுதவும், எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும், கதையளக்கவும்,
கதறவைக்கவும் சாத்தியமாகிறது. ஒரு புகைப்படம்,
சில நொடிக் காணொளிக் காட்சி உலகின் குதூகலத்தை, அடர்த்தியான துக்கத்தை சொடக்கும் நேரத்தில் இண்டு இடுக்குவிடாமல் கொண்டு
சேர்த்து உணர்ச்சி வசப்படவைக்கப் போதுமானது.. இன்னமும் நான்
ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்..?