Wednesday, April 24, 2019

கொம்புள்ள குதிரை - மின்புத்தகம்

முன்னுரை
கண்ணுக்கு மை தீட்டும் கதைகள்

நவீனகாலத்தில் பொழுதுபோக்க எத்தனையோ வந்துவிட்டது.. கையடக்கப் போன்களில் பார்க்கவும், கேட்கவும், ஓயாமல் பேசவும், எழுதவும், எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும், கதையளக்கவும், கதறவைக்கவும் சாத்தியமாகிறது. ஒரு புகைப்படம், சில நொடிக் காணொளிக் காட்சி உலகின் குதூகலத்தை, அடர்த்தியான துக்கத்தை சொடக்கும் நேரத்தில் இண்டு இடுக்குவிடாமல் கொண்டு சேர்த்து உணர்ச்சி வசப்படவைக்கப் போதுமானது.. இன்னமும் நான் ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்..?

ஆலமர இடையழகு - மின்புத்தகம்




இது ஒரு புதிய முயற்சி. புதிய வரவு. “ஆலமர இடையழகு“ 2007-ல் முதல்பதிப்பு கண்டு, தமிழக அரசின் விருதையும் பரவலான வாசகர் கவனத்தையும் பெற்றுத் தந்தது. அதிலிருக்கும் பனிரெண்டு கதைகளை இரு தொகுதிகளாக்கி, (கொம்புள்ள குதிரை அடுத்து வரவிருக்கிறது) மின்புத்தகமாக கொண்டு வந்தாயிற்று.

அமேஸான் கிண்டிலில் புத்தகம் போடுவது என்பது சட்டை பேண்ட் போடுவது போல எளிமையானது. பரிட்சைக்கு படிப்பது போல வழிமுறைகளை தேடிப் பிடித்துப் படித்து, யூடியூப்பில் வீடியோ பார்த்து, ஆங்கிலத்திலும் தமிழிலும் அள்ளித் தெளிக்கிற அறிமுகமற்ற நண்பர்களின் அறிவுரைகள் வழிமுறைகளை உள்வாங்கி, தனியாக ஒரு கணக்கு வழக்கு வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கி, அட்டை வடிவமைத்து, அதற்கு தனி விடியோக்கள் பார்த்து, நடுநடுவே, இந்த ஆணியை பிடுங்க வேண்டுமா என்று ஆயாசமடைந்து, திட்டத்தை ஒத்திப்போட்டு, மிண்டும் தூசு தட்டி எடுத்து, விற்கிற மா தித்தனின் விடா முயற்சியோடு புத்தகமாகப் போட்டு முடிப்பதற்குள்,