Tuesday, June 8, 2021

தலைகீழ் மனிதர்கள். - அக்கப்போர்


தலைகீழ் மனிதர்கள்.
--------------------------------
ஆயிரம் பேரிடம் விசாரித்தால்
அதில் ஒருவர்தான்
இலக்கியப் புத்தகத்தை கட்டிக் கொண்டு அழுவதாக சொல்வார். அந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வாழ்க்கையை கட்டிக்கொண்டு மாறடிக்கிறார்கள்.

எல்லோருக்கும் வயிறு இருக்கிறது.
வயிற்றை கவிதை கொண்டு நிரப்ப முடியாது.
காசு கொண்டுதான் நிரப்ப முடியும்.
பணம் என்கிற வேதாளம் எல்லா மனிதர்களையும் தலைகீழாக மாற்றி வௌவாலாக தொங்கவிட்டிருக்கிறது.

நானும் ஒரு வௌவாலாக மாறிய பிறகு
என்னை நான் மாற்றிக்கொண்டேன்.
அப்போதிலிருந்து நான்
தலைகீழாக எழுதத் துவங்கினேன்.
சில மனிதர்களும்
நிறைய வௌவால்களும்
அந்த எழுத்தை
படித்து புரிந்து கொண்டு
ரசிக்கின்றன.
---------------------
08.06.2021

Monday, June 7, 2021

தலையெழுத்து - கவிதை

தலையெழுத்து

------------------------

முதல் பக்கத்தை

காணவில்லை

இரண்டாம் பக்கத்தை கிழித்துவிட்டேன்.

மூன்றாம் பக்கத்தில்

ஏகப்பட்ட எழுத்துப் பிழை

நான்காம் பக்கத்தில்

வைக் காணோம்.

ஐந்தாம் பக்கத்தில்

பாய் இருக்கும் இடத்தில்

பேய் இருக்கிறது

ஆறாம் பக்கத்தில்

Sunday, June 6, 2021

பெண் உலகம் - கவிதை


பெண் உலகம்

---------------------------

சாகும்வரை

உண்பதை நிறுத்தப் போவதில்லை

உயிரோடு இருக்கும் வரை

போராட்டம் நிற்கப் போவதில்லை.

 

எனக்கு எதிரிகள் உண்டு

அவர்களோடு உரசலும் உண்டு

எனக்கு நண்பர்கள் உண்டு

அவர்களோடு மோதலும் உண்டு.

 

தூங்கும் போதும் கனவில்

பேசிக்கொண்டிருப்பேன்

காதலிக்கும் ஆண்களோடு

ரகசியமாய் உரையாடுவேன் .

கோமகனின் தாய். - கவிதை


கோமகனின் தாய்.

-------------------------------

முன்பொரு காலத்தில்

கணபதிக்கு சாப்பிடத் தெரியாது

அவன் சிறு வயது பிள்ளை என்பதால்

அம்மா அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

 

பின்பொரு காலத்தில்

கணபதிக்கும்

சித்ராவுக்கும்

திருமணம் ஆனது.

 

சில ஆண்டு கழித்து

கணபதிக்கு உஷை பிறந்தாள்.

கடைசி கேள்வி - கவிதை


கடைசி கேள்வி

------------------------------

மூச்சு முட்டுகிறது

உயிர் தப்பிக்கப் போராடுகிறேன்.

ஆயிரம் பிறை கண்ட

கழுதைகளுக்குத் தெரியாத

அர்த்தம் எனக்கு மட்டும்

புரியப் போவதில்லை.

இடுக்கில் மாட்டிக்கொண்ட

வாழ்க்கையை

நெம்புகோள் கொண்டு

வெளியே எடுக்க முயல்கிறேன்.

பார்க்க கேவலமாய்

இருக்கிறது.

 

Thursday, June 25, 2020

மாயத்தில் உண்டான நீரும், நெருப்பும் -

-------------------------------------------------------------------------------------------------------------------------

காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி; காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி!வீணாகப் புலம்பினதா லறியப் போமோ? விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்!கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக் குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்துநாணாம லொருநினைவாய்க் காக்கும் பொது, நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே!

-              அகத்தியர்
பிறப்பிலிருந்து இறக்கும் வரை உயிர்கள் ஏதாவதொன்றை தினம் தேடிக்கொண்டே இருக்கிறது. ஒரு தாயின் வயிற்றில் மனித ரூபமாய் பிறக்கிற எல்லோரும் முதலில் அம்மையின் கதகதப்பைத் தேடுகிறார்கள். அன்றிலிருந்து வாழும் காலம் முழுவதற்கும் ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். உண்பதற்கு உணவை, உடுத்த உடையை, நிம்மதியை, புரியாத வாழ்க்கையை, பாலைவனச் சந்தோசத்தை, அகங்காரம் தரும் பதவியை, நிறைவு தராத பணத்தை, சுயநலமிக்க புத்தியை, சொப்பனத்தில் மிதக்கும் முக்தியை, கிட்டாத ஞானத்தை, தள்ளாடவைக்கும் புகழை, கைக்கு எட்டாத கனவை, ஓட்டைக் காலணாவை, உடைந்த உறவை, மனைவியை, பிள்ளையை, ஆடம்பரத்தை, அலங்காரத்தை, அங்கீகாரத்தை, பறவையின் சங்கீதத்தை, தனக்கான கண்ணீரை, பாசத்தை, அன்பை, அழுகையை... இப்படி ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர்களின் உயிரியக்க ஆதாரம் தேடல்தான். மனிதர்கள் தேடி அலைகிற சாபம் பெற்றவர்கள்.
அவுரங்காபாத்தில் இருந்த ஒரு செல்வந்தர் இப்படித்தான் ஒருமுறை தொலைந்துபோன ஒன்றை தேடிக்கொண்டிருந்தார். அவர் தேடிக்கொண்டிருந்தது ஒரு குதிரையை! பணம்படைத்த மனித மனத்திற்கு சின்னதாய் ஒரு குணக் கோளாறு உண்டு. மனிதனைக் காட்டிலும் மனிதனின் மிதியடியே மதிப்பு மிக்கது என்று. அது நம்பிக்கொண்டிருக்கும் ஊரில் அவரது மனைவி மக்களும், உறவுக்காரர்களும் இவரைக் காணோமென்று தேடிக்கொண்டிருப்பார்கள். இவரோ நாள் கணக்கில் தொலைந்துபோன தன் குதிரையை தேடிக்கொண்டிருந்தார். மனைவி மக்களைவிட தொலைந்துபோன அவரின் குதிரை விலைமதிக்க முடியாத ஒன்றாய் அப்போதைக்கு அவருக்கு தோன்றியிருக்கலாம்.

பெண் உலகம்

ஆண்களால் திறமையாக சம்பாதிக்க முடியும். பெண்களால் சம்பாதிக்கவும் முடியும். திறமையாக குடும்பத்தை நிர்வாகம் செய்யவும் முடியும். குழந்தைகளை பராமரிக்கவும் முடியும். நல்ல மனிதத் தன்மை கொண்டவர்களாக வளர்க்கவும் முடியும். அன்பும் கருனையும் கொண்ட பெண்களால் மட்டுமே நல்ல உலகை, நாட்டை , மனிதர்களை உருவாக்க முடியும். அன்பும் கருணையும் கொண்ட ஒரு ஆண் அறத்தோடு இருக்கிறான் என்றாள் அவனுக்குள் ஒரு பெண் இருக்கிறாள் என்று பொருள். இதன் பொருள்... இந்த பிரபஞ்சம் ஆண்களால் அல்ல. பெண்களால் உருவாக்கப்பட்டது.
* வரதராஜன்.


Sunday, June 14, 2020

14-Jun-20
-
நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிகாலை ஐந்து மணி வைகரை பொழுது நேரத்தில் உலகை ரசிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறேன். குயில்கள், மைனாக்கள், காகங்கள், சிட்டுக் குருவிகள், தேன்சிட்டுக்கள், நாரைகள் மற்றும் இயல்பான சின்னஞ் சிறு பறவைகளின் இசையை கேட்பதில் சந்தோசம் கொள்கிறேன். நீண்ட நாட்களாக நான் இழந்த இசை அது. இப்போது அச் சின்னஞ் சிறிய பறவைகளின் இசையை மீண்டும் கேட்க கேட்க.. அந்த இசை அழகு.
-
- வரதராஜனாகிய நான், இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கொள்ளும் சொல்லில் பல பொருள் உண்டு. சுற்றமும் நட்புமே எனது ஊண்டுகோள்கள். உலகெலாம் மகிழ்ச்சியும், நிம்மதியும், நம்பிக்கையும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே எனது ஆர்வம். நல் உள்ளங்களால் இந்த உலகம் நிறைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.
-
- நல் உள்ளம் கொண்ட அனைவருக்கும் எனது அன்பும் கருணையும்.
-
- அனைவரும் நலமுடன் நிம்மதியுடன் வளமுடன் வாழ எனது வாழ்த்துக்களும் விருப்பங்களும்.
- நிம்மதி பெருகட்டும். நன்றிகள் பல.
-
- வரதராஜன்.


Wednesday, June 3, 2020

வணக்கம் நண்பர்களே...


3-Jun-20
வணக்கம் நண்பர்களே...
என்னைப் பற்றி என்னை நானே வியந்து சொல்ல ஒரு தகவல் சொல்கிறேன்... 

நான் சற்று ஏறக்குறைய 2010 ஜனவரியில் இருந்து பிரபல பதிவர்... பிளாக்கின் வழியாக... இரண்டாயிரத்து பத்து முதல் இப்போது 2020 வரையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக பதிவில் பகடையாடுகிறேன்.. இதுவரை நான் எழுதிய பதிவுகள் மொத்தம் நாற்பத்தி எட்டு அதில் சொத்தை சொல்லைகள் போக மிச்சம் இருப்பது எத்தனையாயிரம் கோடிகள் என்று தெரியவில்லை. மொத்தமாக ஆறு ஆயிரத்து நானூத்து இருபது பதிவுகளை யாரோ படித்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் ஆரம்பித்து அண்டார்டிக்கா வரையில் பல பேர் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். அதிகமில்லை மொத்தம் 48 பதிவுகள் சில நூறு பேர் கண்டு இத்தனை பெரிய சாதனை நடந்திருக்கிறது. யோசிக்கவே ஆச்சரியமாக நம்பமுடியாத அளவுக்கு இருக்கிறது. இத்தனை பெரிய சாதனையை மீண்டும் என்னால் முறியடிக்க முடியுமா என்று கூட தெரியவில்லை. இன்றைக்கு 3.6.2020 வரைக்குமான என் கணக்கு வழக்கை உங்களிடம் சொன்னால் அதன் பயங்கரம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இத்தனை பலகாலத்திற்கு பிறகு என்னுடைய பாலோயர் என்றால் மொத்தம் 4 பேர். அதில் நானே இரண்டு ஆளாக இருக்கவும் வாய்ப்புண்டு. அது எப்படி பட்ட பெரிய பட்டியல் என்பதை சொன்னால் அதன் வீரியம் புரியும். அதிகம் இல்லை நண்பர்களே... இன்றைய என்னில் நான் கண்ட பேஜ் கணக்கை நீங்களே படித்துப் பாருங்கள்... அச்சமில்லாமல்... இதுதான் இன்றைய கணக்கு...

ஆனால் நண்பர்களே... எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எழுதும் மனிதனிருக்கு மட்டும் எழுதும் ஆர்வமிருக்கும். வரைக்கும் புதிய அத்தியாயத்தோடு. தொடங்குவோம் நண்பர்களே...
(இப்படி ஒரு அதிர்ச்சி தொடக்கத்திற்கான ஆரம்பத்திற்கு ஒரு காரணமிருக்கிறது. அதையும் நேரம் வரும்போது சொல்வேன்) தொடர்ந்து எழுதுவோம் நண்பர்களே...
மறந்து போன அந்த நான்கு பாலோயர்ஸ் தங்களை மறந்து போகாமல் இருப்பதற்காக சிறு குறிப்பு... என் பெயர் வரதராஜன். புனைவில் எழில்வரதன் என்றும் சொல்வார்கள். அவர்களையும் இனி என் மீது நம்பிக்கை கொண்ட நாலான நாலுகோடியே நான்கு கோடி ஆட்களுக்கும் தொடர்ந்து ஆர்வம் கொண்டு எழுத முயற்சிக்கிறேன். தொடர்ந்து பயணிப்போம். வணக்கம் நண்பர்களே...

எழுத்து வடிவம் நான்.
எழுதியது எனது மனைவி விஜயலட்சுமி.