Sunday, June 14, 2020

14-Jun-20
-
நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிகாலை ஐந்து மணி வைகரை பொழுது நேரத்தில் உலகை ரசிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறேன். குயில்கள், மைனாக்கள், காகங்கள், சிட்டுக் குருவிகள், தேன்சிட்டுக்கள், நாரைகள் மற்றும் இயல்பான சின்னஞ் சிறு பறவைகளின் இசையை கேட்பதில் சந்தோசம் கொள்கிறேன். நீண்ட நாட்களாக நான் இழந்த இசை அது. இப்போது அச் சின்னஞ் சிறிய பறவைகளின் இசையை மீண்டும் கேட்க கேட்க.. அந்த இசை அழகு.
-
- வரதராஜனாகிய நான், இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கொள்ளும் சொல்லில் பல பொருள் உண்டு. சுற்றமும் நட்புமே எனது ஊண்டுகோள்கள். உலகெலாம் மகிழ்ச்சியும், நிம்மதியும், நம்பிக்கையும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே எனது ஆர்வம். நல் உள்ளங்களால் இந்த உலகம் நிறைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.
-
- நல் உள்ளம் கொண்ட அனைவருக்கும் எனது அன்பும் கருணையும்.
-
- அனைவரும் நலமுடன் நிம்மதியுடன் வளமுடன் வாழ எனது வாழ்த்துக்களும் விருப்பங்களும்.
- நிம்மதி பெருகட்டும். நன்றிகள் பல.
-
- வரதராஜன்.


No comments: