Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, June 7, 2021

தலையெழுத்து - கவிதை

தலையெழுத்து

------------------------

முதல் பக்கத்தை

காணவில்லை

இரண்டாம் பக்கத்தை கிழித்துவிட்டேன்.

மூன்றாம் பக்கத்தில்

ஏகப்பட்ட எழுத்துப் பிழை

நான்காம் பக்கத்தில்

வைக் காணோம்.

ஐந்தாம் பக்கத்தில்

பாய் இருக்கும் இடத்தில்

பேய் இருக்கிறது

ஆறாம் பக்கத்தில்

Sunday, June 6, 2021

பெண் உலகம் - கவிதை


பெண் உலகம்

---------------------------

சாகும்வரை

உண்பதை நிறுத்தப் போவதில்லை

உயிரோடு இருக்கும் வரை

போராட்டம் நிற்கப் போவதில்லை.

 

எனக்கு எதிரிகள் உண்டு

அவர்களோடு உரசலும் உண்டு

எனக்கு நண்பர்கள் உண்டு

அவர்களோடு மோதலும் உண்டு.

 

தூங்கும் போதும் கனவில்

பேசிக்கொண்டிருப்பேன்

காதலிக்கும் ஆண்களோடு

ரகசியமாய் உரையாடுவேன் .

கோமகனின் தாய். - கவிதை


கோமகனின் தாய்.

-------------------------------

முன்பொரு காலத்தில்

கணபதிக்கு சாப்பிடத் தெரியாது

அவன் சிறு வயது பிள்ளை என்பதால்

அம்மா அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

 

பின்பொரு காலத்தில்

கணபதிக்கும்

சித்ராவுக்கும்

திருமணம் ஆனது.

 

சில ஆண்டு கழித்து

கணபதிக்கு உஷை பிறந்தாள்.

கடைசி கேள்வி - கவிதை


கடைசி கேள்வி

------------------------------

மூச்சு முட்டுகிறது

உயிர் தப்பிக்கப் போராடுகிறேன்.

ஆயிரம் பிறை கண்ட

கழுதைகளுக்குத் தெரியாத

அர்த்தம் எனக்கு மட்டும்

புரியப் போவதில்லை.

இடுக்கில் மாட்டிக்கொண்ட

வாழ்க்கையை

நெம்புகோள் கொண்டு

வெளியே எடுக்க முயல்கிறேன்.

பார்க்க கேவலமாய்

இருக்கிறது.

 

Saturday, November 30, 2019

கூர்மையான பற்கள். - ஆபத்தும் பராமரிப்பும்.



முன்பே சொல்லிவிடுகிறேன். இது நிச்சயமாக  பற்கள் பற்றிய மருத்துவக் குறிப்பு அல்ல. என்னிடம் கொஞ்சம் உப்பு மற்றும் கோபால் பல்பொடி மட்டுமே இருக்கிறது. பற்களை பராமரிக்க அவை போதுமானதல்ல. கூர்மையான பற்களால் அவதிப்படுகிறவர்கள் நல்லதொரு பல் மருத்துவரை அனுகுவதே நல்லது. 

            பற்களோடு தொடர்பில்லை என்றால் இந்தத் தலைப்பு எதற்காக?

Thursday, October 31, 2019

# மழைக்காலத்தில் முளைக்கும் குடைக்காளான் #

     ·         நல்லிரவு நேரம். மழை தொரத்தொரவென பெய்துவிட்டு சற்றுமுன்தான் ஓய்ந்திருக்கிறது. இப்போதே குளிர்காலம் வருவதன் ஆயத்தம் தெரிகிறது. ஈரம்சாரமான இந்த இரவில் அமானுஷ்யங்கள் குறித்து எழுதலாமா என்று யோசிக்கிறேன்.
·         பேய்க் கதைகளா? நல்லிரவிலா?

Friday, October 4, 2019

கொசு விரட்டி 2

நா போக்கிரி பொம்பள

வாடா என் ஆண் வீரேய்ய்..

போகாத ஊருக்கு
தடம் காட்டும் வெறும் பயலே
யாரடா நீ
தலையற்ற முண்டமே
ஊசிப்போன பண்டமே


கொசு விரட்டி

தண்டமுத்து

மிடுக்காக உடுத்துவான்
அழகாய்ப் பேசுவான்
நாகரீகம் எதுவென்று
நயம்பட உரைப்பான்
இன்முகம் காட்டுவான்

Sunday, July 28, 2019

பெரிய கறுப்பன் பெரிய கறுப்பனாகவே இருப்பது.


சமையற்கலையில், பலகாரங்கள் சுடுகிறபோது, முதலில் எண்ணெய் சூடேறிவிட்டதா என்பதை அறிந்துகொள்ள ஒரு துளி மாவை விட்டு சொதித்துப் பார்ப்பது போல, எழுத வருகிறதா என்பதை அறிந்து கொள்ள எல்லோருமே முதலில் கவிதையை முயற்சிக்கிறார்கள். நன்றாக வெந்து பொன்னிறமாக மேலே மிதந்தால் அது பக்குவமான கவிதை. தீவிரமாக யோசித்து,

Monday, May 27, 2019

பிறகு நான் சிறகானேன்

நான் ஒரு வழிப்போக்கன்.
பூமிக்கு
அனுப்பி வைத்தார்கள்.
எனக்கு முன்பே வந்தவர்கள்
எனக்கு ஒரு பெயர் இட்டார்கள்.
செய்ய வேண்டிய
கடமைகள் என்று
சிலவற்றை போதித்தார்கள்.
அதில் குற்றமும் இருந்தது,
அன்பும் இருந்தது.

Sunday, August 28, 2016

நாமும் நமது தலைமுறையும்.


காடும் மழையும் 
வெட்டவெளியும் 
வின்மீனும் கலையும் 
பொய்யென்று பொய்க்க.. 
மெய்நிகர் மின்னுலகில் 
வாழ்ந்து சலிக்கிறார்கள்
 பிள்ளைகள்.