நா போக்கிரி பொம்பள
போகாத ஊருக்கு
தடம் காட்டும் வெறும் பயலே
யாரடா நீ
தலையற்ற முண்டமே
ஊசிப்போன பண்டமே
கழிப்பறைக் கதவருகே
காத்திருக்கும் ஈரச் சாக்கே
கொம்பில்லா எருமை மாடே
சொல்லடா
உனக்கும் எனக்கும் நடுவே
என்னடா?
தள்ளி நில்லடா
முறைக்கும் கோட்டானே
பிச்சைக்காரன் எடுத்த வாந்தியே
வதங்கிப்போன வாழைக் காயே
முடியில்லா பேயே
நில்லடா
நிலக்கடலை கொட்டையே
வேகவைத்த முட்டையே
காதலனாம்
திருமணமாம்
கணவனாம்
ஓருயிராம்
தலை மயிராம்.
முன்னது முண்டம்
பின்னது தண்டம்
உனக்காக வேலி தாண்ட
நான் என்ன ஆடா மாடா
நீ மூடிக்கிட்டு போடா மூடா.
No comments:
Post a Comment