Thursday, October 31, 2019

# மழைக்காலத்தில் முளைக்கும் குடைக்காளான் #

     ·         நல்லிரவு நேரம். மழை தொரத்தொரவென பெய்துவிட்டு சற்றுமுன்தான் ஓய்ந்திருக்கிறது. இப்போதே குளிர்காலம் வருவதன் ஆயத்தம் தெரிகிறது. ஈரம்சாரமான இந்த இரவில் அமானுஷ்யங்கள் குறித்து எழுதலாமா என்று யோசிக்கிறேன்.
·         பேய்க் கதைகளா? நல்லிரவிலா?

Sunday, October 27, 2019

# நல்ல கவிதைகளை எப்படி அணுக வேண்டும்? #



பலபேர் ஊரவைத்து துவைத்துக் காயப்போட்ட துணிகளை மீண்டும் துவைத்துக் கிழிப்பதில் உடன்பாடில்லைதான். நான்கு வரிக் கவிதைகளை படித்துவிட்டு, சுமாராக புன்னகைத்து, அடுத்த பக்கத்திற்கு தவ்வுகிற போது மீண்டும் மீண்டும் அதே கவிஞர் அதே கவிதைகளை அதே பெயரில் எழுதி இன்புறுத்தியதால் சில வார்த்தைகள் மட்டும் சொல்லத் தோன்றியது..

Wednesday, October 16, 2019

மிட்நைட் உயிரினங்கள்

மின்சாரம் மனிதர்களோட சில அடிப்படை குணங்களை மொத்தமா மாத்தியிருக்கு. ராத்திரி பனிரெண்டு மணிக்கு குளிச்சிட்டு சுடச் சுட ரவா உப்புமா சாப்பிடறவங்களப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். அவங்களோட உயிரியல் கடிகாரம் சந்தேகமே இல்லாம ஸ்தம்பிச்சி நின்னுபோயிருக்கும். பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியாது. அஸ்த்தமனத்திற்கு பிறகு தீவிரமா செயல்படுவாங்க. ராத்திரி ஆனா அவங்களோட உலகம் பரபரப்பாயிடும். வீட்டுல இருக்கிற மொத்த விளக்கையும் போட்டு இரவ பகலாக்கி அப்போதான் பொழுது விடிஞ்ச மாதிரி சுறுசுறுப்பா செயல்பட ஆரம்பிப்பாங்க. சந்தேகமே இல்லாம அவர்கள் மிட்நைட் உயிரினமா மாறிட்டாங்க. அப்படின்னா பகல்ல என்ன பண்ணுவாங்க? பகல்ல செயல்படவேண்டியவங்க இரவு நேரத்த தேர்ந்தெடுக்க காரணமென்ன? இது வரமா? நோயா?

Tuesday, October 15, 2019

கருங்கல் கோட்டை சிங்க பைரவன் - பகடிச் சரிதம்



  • “கருங்கல் கோட்டை சிங்கபைரவன் கதை“ என்கிற எனது சரித்திர நகைச்சுவைப் புதினம் எனப்படுகிற பகடிச் சரிதம்  இப்போது யார் யாரிடம் அபத்திரமான நிலையில் இருக்கிறது, எத்தனை பேர் வாசித்திருப்பார்கள், யாரெல்லாம் எதிர்காலத்தில் வாசிக்கக் காத்திருக்கிறார்கள் என்கிற தரவுகள் இல்லை. 
  • யதேச்சையாக அதைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டு சிலாகித்து பேசியதால் மீண்டும் தூசு தட்டி மீண்டும் வாசித்து சிரித்துக்கொண்டேன். 
  • சரித்திரப் பகடிகள் எப்போதுமே சாகாவரம் பெற்றவை. அதைமின்புத்தகமாக கொண்டுவர உத்தேசம். எதற்கும்அதன் வாசகச் சுவை அறிந்துகொள்ள மாதிரிக்கு மூன்றாம் அதியாயத்தை படித்துவிடுங்கள்.

Monday, October 7, 2019

சொல்லிசைப் பிரதிகள் - இதெல்லாம் ஒட்டகமா?


இது நியாயமில்லைதான். வாசிப்பவர்களின் நேரத்தோடும், ரசனையோடும் விளையாடக் கூடாதுதான். மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதிவிட்டு, “இனி இது படிப்பவன் பாடு” என்று வீட்டுக் குப்பையை வீதியில் இறைக்கிற மனோபாவம் தவறான ஒன்றுதான். அந்தத் தவறு தொடர்ந்து உலகமெங்கும் நடந்தபடிதான் இருக்கிறது.. பாவம் வாசக நெஞ்சங்கள்.


Friday, October 4, 2019

கொசு விரட்டி 2

நா போக்கிரி பொம்பள

வாடா என் ஆண் வீரேய்ய்..

போகாத ஊருக்கு
தடம் காட்டும் வெறும் பயலே
யாரடா நீ
தலையற்ற முண்டமே
ஊசிப்போன பண்டமே


கொசு விரட்டி

தண்டமுத்து

மிடுக்காக உடுத்துவான்
அழகாய்ப் பேசுவான்
நாகரீகம் எதுவென்று
நயம்பட உரைப்பான்
இன்முகம் காட்டுவான்