Sunday, July 28, 2019
Thursday, July 18, 2019
மீண்டும் “ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு“
“ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு“ புதுப்பொழிவோடு,
ரசனையான அட்டைப்படத்தோடு மறுபதிப்பாக வந்திருக்கிறது. பிரதி கிடைக்குமா என்று நேரிலும்,
தொலைபேசியிலும் விசாரித்த அன்பு உள்ளங்கள் சந்தியா பதிப்பகத்தாரை தொடர்புகொண்டு புத்தகத்தைப் பெறலாம்.
அந்தரத்தில் நடப்பதும் வளையத்திற்குள் நுழைவதும் பார்க்கும் கண்கள் நூறு உண்டு என்ற
நம்பிக்கையில்தான். கலைக்கும் கலைஞனுக்கும் கை தட்டலே உந்துவிசை.
Saturday, July 6, 2019
பவுர்ணமி யுத்தம் -மின்புத்தகம்
ஞாபக அடுக்கில் தங்கிவிட்ட சில மனிதர்களின்
சிறு குறிப்பை, அவர்களை அசைத்துப்பார்த்த சில சம்பவங்களின் தெறிப்பை
கதைகளாக எழுதியிருக்கிறேன். பத்து மனிதர்கள். பத்துக் கதைகள்.
மகிழ்ச்சியோ, குமுறலோ.. அது பட்டவன் பாடு. அதை
திரும்பத் திரும்ப எழுதி, அதைப் படித்து, எவன் பாடுகளையோ தன் பாடுகளாய் பாவித்து உணர்ச்சிவசப்பட்டு..., இதல்லாம் எதற்காக? முகம் தெரியாத மனுசர்களின் கதைகளை அறியும் ஆர்வம் எங்கிருந்து கிளைக்கிறது?
Friday, July 5, 2019
முதல் புத்தகம் - எனது ஞாபகங்களை முறுக்குப் பிழிகிறேன்.
2004
நவம்பரில் எனது முதல் புத்தகம்
வெளியாகிறது. புத்தகங்களை கூரியரில் அனுப்பிவிட்டார்கள். புராணக் கதையாடல்களில்
ஒரு காட்சி வரும்... மோகினி அமிர்தம் தருகிறாள். அசுரன் வாங்கிக்கொள்கிறான்.
அவன் கரங்கள் நடுங்குகின்றனவா? கூரியர்பாய் நடுக்கத்தை
கவனித்துவிட்டார். “தலைசிறந்த நாட்டியக்காரி எப்போதும் ஆடுவாள்.
புத்தகங்கள் ஆடுமா?“ அவையின் சந்தேகங்கள் இவை.
அவை ஆட்டுவித்து ஆடவில்லை. உண்மையில் புத்தகங்கள்
துடிக்கின்றன. அவற்றுக்கு உயிர் இருக்கிறது.
புத்தகத்தின் அட்டைப் படமும்,
தலைப்பும் விவரிக்க முடியாத உணர்வைத் தருகிறது. 'இன்றுமுதல் நீ எழுத்தாளன் என்று அழைக்கப்படுவாய்' என்ற
குரல் எல்லாம் கேட்கவில்லை. 'மெய்யெல்லாம் சிலிர்த்து ஆனந்தக்
கண்ணீர் உகுத்து அந்தரத்தில் மிதந்தேனே... என்ன தவம் செய்தேனோ
யான்' என்றெல்லாம் அதீதமாகச் சொல்லி இலக்கியப் பிரவேசத்தை மிகைப்படுத்த
விரும்பவில்லை. பிரபல பத்திரிக்கையில் மூன்று வரிக் கவிதையும்,
அதன் கீழடிப் பெயரும் முதன் முதலில் பிரசுரம் ஆகிறபோது, எழுத்தை, அச்சுவடிவத்தில் பார்க்கிறபோது உண்டாகிற மன
மகிழ்ச்சியை அனுபவித்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.
Subscribe to:
Posts (Atom)