ஞாபக அடுக்கில் தங்கிவிட்ட சில மனிதர்களின்
சிறு குறிப்பை, அவர்களை அசைத்துப்பார்த்த சில சம்பவங்களின் தெறிப்பை
கதைகளாக எழுதியிருக்கிறேன். பத்து மனிதர்கள். பத்துக் கதைகள்.
மகிழ்ச்சியோ, குமுறலோ.. அது பட்டவன் பாடு. அதை
திரும்பத் திரும்ப எழுதி, அதைப் படித்து, எவன் பாடுகளையோ தன் பாடுகளாய் பாவித்து உணர்ச்சிவசப்பட்டு..., இதல்லாம் எதற்காக? முகம் தெரியாத மனுசர்களின் கதைகளை அறியும் ஆர்வம் எங்கிருந்து கிளைக்கிறது?
உள்ளக் குமுறலோ, சந்தோசக் கெக்களிப்போ... அது எதுவானாலும் அவையே நம்மை
செலுத்துகிறது. சவால்களை சந்திக்கிறபோது, பல்லாயிரம் வருடத்திற்கு முன்பு கற்றுக்கொண்ட அவர்களின் அனுபவமே முதலில் துடித்துவந்து
எதிர்கொள்ளும் ஊட்டத்தைத் தருகிறது. ஆதிமனிதன் வாழ்வதற்கான நுட்பங்களை
மரபணுவில் எழுதி வைத்தான். அதுவே இன்றைக்கு இலக்கியத்திலும் தொடர்கிறது.
மனிதர்களைப் பற்றிய எல்லா கதைகளுமே நாளைக்கான படிப்பினைகள்தான்.
நன்றி!
No comments:
Post a Comment