Sunday, August 6, 2017

புத்தகம் - புதுவரவு

புதிய வரவு


“செம்புலி வேட்டை” – “அழகிய லம்பன்” என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் புதுவரவாய் வந்திருக்கிறது. நண்பர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். இரண்டு தொகுப்புக்களை ஒருசேர பார்த்ததும் பழைய நினைவுகள் பின்னுக்கு இழுக்கிறது. வேலைபார்ப்பது கணரகவாகன உற்பத்தி நிறுவனத்தில். இன்றைக்கும் இரும்படிக்கும் வேலைதான். இதன் நடுவே எழுதவும் வாய்த்திருக்கிறது. பொதிசுமக்கும் கழுதை, உணவு இடைவேளையில், வயலின் வாசிப்பது போல இதுவும் ஒரு இடுக்கனில் இன்புறும் நிகழ்வு. தூண்டல் இல்லாமல் துலக்கம் இல்லை. யார் என்னை தூண்டினார்கள் எது என்னை எழுதவைத்தது?
.
நிச்சயமாக அவை புத்தகங்கள்தான். ஆனால் எழுதியவை எல்லாம் இலக்கியமல்ல. சபையில் ஆடாமல் கூத்தனுக்கு என்ன பெருமை? அதற்கு ஒரு களம் வேண்டாமா? அந்த களம் அமைத்துக் கொடுத்தவர்கள் யார்?. யோசித்துப் பார்க்கிறேன்.