--------------------------------
ஆயிரம் பேரிடம் விசாரித்தால்
அதில் ஒருவர்தான்
இலக்கியப் புத்தகத்தை கட்டிக் கொண்டு அழுவதாக சொல்வார். அந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வாழ்க்கையை கட்டிக்கொண்டு மாறடிக்கிறார்கள்.
எல்லோருக்கும் வயிறு இருக்கிறது.
வயிற்றை கவிதை கொண்டு நிரப்ப முடியாது.
காசு கொண்டுதான் நிரப்ப முடியும்.
பணம் என்கிற வேதாளம் எல்லா மனிதர்களையும் தலைகீழாக மாற்றி வௌவாலாக தொங்கவிட்டிருக்கிறது.
நானும் ஒரு வௌவாலாக மாறிய பிறகு
என்னை நான் மாற்றிக்கொண்டேன்.
அப்போதிலிருந்து நான்
தலைகீழாக எழுதத் துவங்கினேன்.
சில மனிதர்களும்
நிறைய வௌவால்களும்
அந்த எழுத்தை
படித்து புரிந்து கொண்டு
ரசிக்கின்றன.
---------------------
08.06.2021
No comments:
Post a Comment